1. ஊரடங்கால் வேலையிழந்த தினக்கூலி பணியாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் மத்திய அரசு ரூ.1,500ஐ தரவேண்டும்.
2. ஒரு மாதம் இலவசமாக அரிசி, பருப்பு ரேஷனில் வழங்க வேண்டும்.
3. வருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை 3 மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்.
4. வங்கி கடன், மாத தவணை வசூலிப்பதை 3 மாதம் தள்ளிவைக்க வேண்டும். ஒரு மாத தவணையை தள்ளுபடி செய்ய வேண்டும்.
5. வங்கிகள் வராக்கடன் என அறிவிப்பதை 90 நாளில் இருந்து 120 நாளாக மாற்ற வேண்டும்.
6. ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்களை கடைகளில் விற்கும் போது யாரும் கூடுதலாக வாங்கி பதுக்க அனுமதிக்கக்கூடாது. அனைவருக்கும் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
7. வங்கிகளுக்கு முதியவர்கள் செல்கின்றனர். அவர்கள் செல்வதை தடுக்க வங்கிகளையும் மூடுவதே நல்லது. ஏ.டி.எம்.,களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
8. கொரோனா பாதிப்பு சந்தேகம் உள்ளவர்களை தனிமைப்படுத்தி கவனிக்க மையங்கள் தேவைப்படும். அதற்கு தனியார் லாட்ஜ்களை அரசு பயன்படுத்த வேண்டும்.சிகிச்சைக்கு நாடு முழுவதும் தனியார் மருத்துவ மனைகளிலும் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும்.
9. தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் (சி.எஸ்.ஆர்.) மூலமும் அரசு மேம்பாட்டு புனரமைப்பு பணிகளை செய்யலாம். இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
1. ஊரடங்கால் வேலையிழந்த தினக்கூலி பணியாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் மத்திய அரசு ரூ.1,500ஐ தரவேண்டும்.