பிரான்ஸ் நாட்டில் சாலையில் நின்று கொண்டிருந்த காரை உடைத்து மரம் ஒன்று தானாக வளர்ந்ததாக ஒரு புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. அது குறித்து கீழே விரிவாக காணுங்கள்.
சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் கார் ஒன்றை உடைத்த நிலையில் மரம் ஒன்று காருக்கு நடுவே வளர்ந்திருந்த போட்டோ ஒன்று வைரலாக பரவியது.
வைரல்
பலர் எப்படி வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்ட காரை உடைத்து ஒரே நாளில் மரம் வளரும் என்று எல்லாம் கேட்கப்பட்டது. இது குறித்து பலர் பல்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவிக்கத் துவங்கினர்.
கருத்து
சிலர் இது ஒரு அதிசயம் மரம் என்றும், சிலர் பல நாட்கள் கார் குறிப்பிட்ட இடத்திலேயே நின்றிருக்கும் அதனால் கட்டிடத்தின் உள்ளே மரம் வளர்வது போல காரின் உள்ளே மரம் வளர்ந்திருக்கும் என்று எல்லாம் கருத்து தெரிவித்தனர்.